முதற்கட்டமாக 5 மில்லியன் பெறுமதியான வேலைகள் கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில்.

முதற்கட்டமாக 5 மில்லியன் பெறுமதியான வேலைகள் கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில்.

சுபீட்சத்தின் நோக்கு ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒரு மைதானம் என்கின்ற திட்டத்தின் கீழ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் முன்மொழிவிற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்ட கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக் கழக மைதானத்திற்க்கான முதற்கட்ட 5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளுக்கான ஆரம்ப நிகழ்வுகழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் மதிப்பிற்குரிய திரு. க. ஜோகவேல் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த நிகழ்வுகளின் போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ. தியாகராஜ சரவணபவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வாசுதேவன், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு. சிவராசா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட துறைசார் அதிகாரிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ