#மாவட்ட #அபிவிருத்திக்குழு #தலைமை #தொடர்பில் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்து

#மாவட்ட #அபிவிருத்திக்குழு #தலைமை #தொடர்பில் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்து

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்திருக்கின்ற பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்க்ஷா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மாவட்ட அவிருத்திக் குழு தலைவர் பதவியின் ஊடாக சிறந்த முறையிலான நிர்வாக மற்றும் அபிவிருத்தி பணிகளை வழிநடத்தி நெறிப்படுத்தும் பொறுப்பு தன் மீது சுமத்தப்பட்டுள்ள தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்த கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற #வறுமையை #ஒழித்து இங்கே இருக்கின்ற #மக்கள் #சுபிட்சமாக, #வலுவான #சமூகமாக வாழ்வதற்கு தன்னாலான முழு ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாகவும் அதே வேளையில் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் மாவட்ட தலைவர் என்கின்ற இந்த விடையத்தை சிறப்பாக வழிநடத்தி மக்களுக்கு சேவை செய்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும்

என்பதோடு பதாகைகள் வைத்தோ மற்றும் பட்டாசுகள் கொழுத்தியோ இதனை கொண்டாடுவதை விடுத்து மக்களுக்கான சேவை செய்கின்ற செயற்பாடுகளையும் மக்களின் தேவைகளை இனங்கண்டு அதனை பூர்த்தி செய்கின்ற மக்கள் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்பதனையும் தெரிவித்திருந்தார்

 

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ