13 வது திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு??

13 வது திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு??

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்! செங்கலடி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!!

அரசின் பங்காளி கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு உட்பட்ட செங்கலடி பிரதேச சபையின் இன்றைய அமர்வில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் நாகமணி கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற செங்கலடி பிரதேச சபையின் இன்றைய(17) அமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ந.திருநாவுக்கரசு அவர்களினால் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட விசேட கலந்துரையாடலின் போது சபையில் எந்த வித எதிர்ப்பும் இன்றி 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 13 வது திருத்தச் சட்டத்தை வலுவாக்குவோம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அது குறித்த பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை வெற்றி பெற செய்துள்ளார்.

 

 

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ