மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாகத் திகழும் கோறளைப்பற்று பாசிக்குடா பகுதியின் மேம்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் விசேட களவிஜயம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாகத் திகழும் அதிகளவான நட்சத்திர விடுதிகளையும், அழகிய கடற்கரை அமைப்பினையும் கொண்ட கோறளைப்பற்று பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தி அதனூடாக மாவட்டத்திற்கான வருமான மட்டத்தினையும், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களையும் அதிகரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஏனைய சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், முகாமையாளர்களுடன் இடம்பெறவுள்ளது.