85 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்பட்ட பங்குடாவெளி தளவாய் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பங்குடாவெளி தளவாய் வீதியினை எமது இராஜாங்க அமைச்சின் 85 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிட்டு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுடன் இணைந்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தோம்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பினை பிரதான ஜீவனோபாயமாக கொண்ட இப்பிரதேசத்தில் விவசாய உள்ளீடுகள் மற்றும் உற்பத்திகளை எடுத்துச் செல்வதற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு பிரதேச விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் எமது இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 02 km நீளமான இவ் வீதியினை கொங்கிரீட் வீதியாக செப்பனிட்டு வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்க, எமது இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, உட்பட கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ