ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் பொதுச் செயலாளர் பூ. பிரஷாந்தனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு பிரதிநிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது இலங்கையின் தேசிய சட்டமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தல்கள் தொடர்பாக இலங்கை ஏற்றுள்ள சர்வதேச மற்றும் பிராந்திய தரநியமங்களின்படி செயற்பட்டமைக்காக தேர்தல் கண்காணிப்பு குழு உறுப்பினர்களால் பாராட்டப்பட்டிருந்ததுடன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் கட்சியின் கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக இதன்போது கேட்டறிந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் (நிர்வாகம்) திரு.பஞ்சலிங்கம், மகளீர் அணி செயலாளர் திருமதி சுஜிகலா அருள்தாஸ், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ