மாவடிமுன்மாரி வயல் முருகன் ஆலய வெளிமண்டப நிர்மான பணிகளுக்கு இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் நிதி ஒதுக்கீடு.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி வயல் முருகன் ஆலய வெளிமண்டப நிர்மான பணிகள் நடைபெற்று வருகிறது.

இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச கிளை ஊடாக மாவடிமுன்மாரி வயல் முருகன் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி ஆலயத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 07 மில்லியன் செலவில் பாடசாலைகள் மற்றும் வணக்கஸ் தலங்களுக்கான உட்கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மேலும் அதனோடு இணைந்ததாக பல்வேறு வாழ்வாதார உதவித்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ