எதிர்வரும் ஒருசில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள கனரக வாகன சாரதிகளுக்கான பயிற்சி நெறிகள் தொடர்பிலான தெளிவூட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பில்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

எதிர்வரும் 01.09.2023 அன்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரவிருக்கும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெளரவ பந்துல குணவர்த்தன அவர்களினால் கனரக வாகன சாரதிகளுக்கான பயிற்சி நெறிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் கெளரவ மனுச நாணயக்காரர் அவர்களும் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனுடன் இணைந்ததான கனரக வாகன சாரதிகளுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.