கஜமுகன் மெகா நைட்ஸ்-2023 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வு

முறக்கொட்டான்சேனை தேவபுரம் கஜமுகன் மெகா நைட்ஸ்-2023 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வானது தேவபுரம் கஜமுகன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலும் அக் கழகத்தின் தலைவர் S.சஞ்சுக்குமார் தலைமையில் கடந்த 09.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு 23.11.2023 நேற்றைய தினம் இறுதிநாள் சுற்றுடன் நிறைவடைந்தது.

அணிக்கு 7 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வில் 70 அணிகள் பங்கு பற்றியிருந்ததுடன் ஏறாவூர் WARRIORS முதலிடத்தை தன்வசப்படுத்தியிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ.சந்திரகாந்தன் அவர்களின் சார்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இறுதிநாள் சுற்றினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இதன் போது சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.சுதர்ஷன், விளையாட்டு உத்தியோகத்தர் T.பிரசாத், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் S.சுதர்ஷன் உட்பட மதகுருமார், பாடசாலை அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்கள், ஆலய பரிபாலன சபைத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ