கலைமகள் முன்பள்ளியின் 40வது ஆண்டு நிறைவு விளையாட்டு விழா

கோறளைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட பேத்தாளை கலை மகள் முன் பள்ளியின் 40வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்போது கெளரவ அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு .நவநீதன் .கல்குடா வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு .ஜீவாகரன் கிராம சேவக அலுவலர் திரு வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கிடையில் ஒற்றுமையினையும் , நற்பண்பினையும் வளர்க்கும் முகமாக பல விளையாட்டு போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதனுடன் இணைந்ததாக பழைய மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியருக்குமென பல போட்டி நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ