மட்டக்களப்பு கல்லடி முகத்துவார அகழ்வு பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு ,மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த கடுக்காமுனை ,பண்டாரியாவெளி ,படையாண்டவெளி, படையாண்டகுளம் ,சேவகப்பற்று, கல்லடிமுனை, பட்டிப்பளை, பிரதர்மார் கண்டம், காஞ்சிரங்குடா வடக்கு, வவுணதீவு ,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள எட்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அழிவுறும் அபாய நிலையில் உள்ளமையினை விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு இணங்க வெள்ள நீர் வடிந்தோடும் முகமாக மட்டக்களப்பு முகத்துவாரத்தினை அகழ்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.
அதற்கமைய இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரப் பகுதியானது தற்பொழுது அகழப்படவிருக்கின்றது. அதன் காட்சிகளையே தற்பொழுது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த