வாழ்வாதார மற்றும் பொது அமைப்புக்களுக்கான உதவித்திட்டங்கள்.
வாழ்வாதார மற்றும் பொது அமைப்புக்களுக்கான உதவித்திட்டங்கள்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் மூலமாக 27/10/2021 அன்று மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிலும் 28/10/2021 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் சுயதொழில் மற்றும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தும் முகமாக சௌபாக்கிய உற்பத்திக் கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆர்வமுள்ள உற்பத்தியாளர்களுக்கான உத்தியோகபூர்வ உற்பத்தி சான்றிதழ்களையும், தேவையான உபகரணங்களையும் வளங்கி வைத்திருந்தார்.
அத்துடன் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்பிற்கனா காசோலைகளையும் வழங்கி வைத்திருந்ததுடன் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்துதிருந்தார்.
குறித்த நிகழ்வுகளின் போது அந்தந்த பிரதேசசெயலகங்களின் பிரதேசசெயலாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் துறைசார் அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்