ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்.

ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்.

ஜனாதிபதி பொது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளானது தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (07) ஆம் திகதி காலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரச்சார நடவடிக்கையானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பிரச்சார செயற்பாடுகளானது மட்டக்களப்பு சந்தை தொகுதி, பேருந்து நிலையம், உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ