முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பரிந்துரைக்கமைய விளையாட்டு கழகங்களை வலுப்படுத்தல் எனும் செயற்திட்டத்தின் ஊடாக முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழக மைதானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தார்.

இதன் போது முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் இருந்து தேசிய மட்ட மேசைப் பந்து போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் பொதுச் செயலாளரினால்  கௌரவிக்கப் பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு திரு. மானகப்போடி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி செயலாளர் இணைப்பாக்கம் வை. சந்திரகுமார் மண்முனை தென்மேற்கு பிரதேச குழு தலைவர் மகேந்திரன் குகநாதன், செயலாளர் சபேசன், உட்பட விளையாட்டு கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ