கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து எமது கட்சியின் ஏற்பாட்டில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார  கூட்டமானது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதான பங்குபற்றலுடன் நடைபெற்ற குறித்த பிரமாண்ட பொதுக்கூட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு ஆளுமை மிக்க நேர்த்தியான அரசியல் தலைமையின் அவசியத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தி இருந்ததுடன், கொடிய போரின் நேரடி பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த எமது மக்களை பெரிதும் பாதித்தது. எனவே நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியிலும் வலுவான கட்டமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்திய வரும், தற்போதைய காலகட்டத்தில் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்திச் சொல்லக்கூடிய வருமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி எட்டியிருந்தது.    

அந்த வகையில் இராஜாங்க அமைச்சரின் அழைப்பை ஏற்று கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி  அன்று கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் மிக நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மாகாண சபை தேர்தலை நடத்துதல், மாகாண சபை அதிகார பகிர்வு உள்ளிட்ட முக்கிய அரசியல் தீர்வுகள் தொடர்பிலும் சாதகமான பதிலை வழங்கியிருந்தார்.

எடுத்த காரியத்தை இதய சுத்தியுடனும் நேர்த்தியாகவும் நிறைவேற்றும் பண்பும் வலுவான அரசியல் கட்டமைப்பும் கொண்டுள்ள நாம் எமது தீர்மானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்கான தேர்தல் பிரச்சார பணிகளை முனைப்புடன் முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒரு அங்கமாக இன்றைய நாளில் பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்துடன் நமது கட்சியின் பலத்தை பறைசாற்றும் கூட்டமாக ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம்.
பிரமாண்டமான குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், நலன்விரும்பிகள், கட்சியின், தலைவர் பணிக்குழு, பிரதேச மற்றும் கிராமிய மட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜாங்க அமைச்சர் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன, வர்த்தக வாணிபம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் உட்பட ஜனாதிபதியின் பிரதானிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ