சந்திவெளி கிராம சேவகர் பிரிவில் 14 மில்லியன் செலவிலான 2 km நீளம் கொண்ட கிறவல் வீதிகளுக்கான ஆரம்ப பணிகளும், 250 மீட்டர் நீளம் கொண்ட துறையடி கொங்கிரீட் வீதி திறந்து வைப்பும்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தனது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக அப்பிரதேசத்தி்ற்கென ஒதுக்கீடு செய்த 10 கோடிக்கும் அதிகமான நிதியினைக் கொண்டு மணல் வீதிகள் அனைத்தையும் கிறவல் வீதிகளாக செப்பனிடும் பணிகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றார்.

அந்தவகையில் சந்திவெளி கிராம சேவகர் பிரிவிலும் 14 மில்லியன் செலவில் 2 km நீளம் கொண்ட 15 உள்ளகவீதிகளை செப்பனிடுவதற்கான ஆரம்ப பணிகளை இராஜாங்க அமைச்சர் நேற்றையதினம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார். அதனுடன் இணைந்ததாக பூரணப்படுதபட்ட 250 மீட்டர் நீளமான சந்திவெளி துறையடி கொங்கிரீட் வீதியினையும் திறந்து வைத்திருந்தார்.

பின்னர் கோறளை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி விஷ்னு ஆலயத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஆலய பரிபாலன சபையினரின் கோரிக்கையினை ஏற்று ஆலய மகோற்சவத்தினை முன்னிட்டு கொடித்தம்பத்திற்கென தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 200,000 ரூபாவினை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.

குறித்த வீதி ஆரம்ப பணிகளின் போது உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச மட்ட குழு தலைவர்கள், பொது மக்களென பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ