முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டி -2023
முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் தமது 54வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டியானது அக்கழகத்தின் தலைவர் பு.தனராசா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளனம் போன்றவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 கழகங்கள் குறித்த சுற்றுப்போட்டியில் பங்கு பற்றி இருந்தபோதிலும் மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் மற்றும் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகம் ஆகிய இரு கழகங்களும் இறுதிப் போட்டியில் பங்கு பற்றி இருந்த போதிலும் இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் முதலிடத்தை தட்டிச்சென்றதுடன் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டி-2023 ற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு கழகங்களுக்கு வெற்றி கிண்ணங்களையும் பணப்பரிசல்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
மேற்படி நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,பாடசாலை அதிபர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்