33 மில்லியன் ரூபா செலவில் 650m நீளமான வடிகான்.
மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அண்மையில் வந்தாறுமுலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தார்.
அதன்போது அப்பகுதி மக்கள் அப்பிரதேசத்திற்கான வடிகான் வசதிகள் இன்மை தொடர்பிலும் அதீத மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பது தொடர்பிலும் ஆதலால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை தொடர்பிலும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் 33 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்பிரதேசத்திற்கான 650m நீளமான வடிகான் நிர்மான பணிகளை துரிதகதியில் ஆரம்பித்து வைத்திருந்தார்.
தற்பொழுது அப்பணிகள் முற்றுப் பெறும் தருவாயிலுள்ள நிலையில் அதற்கான களவிஜயத்தினை நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்களென பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்