Little Bird முன்பள்ளி பாடசாலையின் இவ்வாண்டிற்கான விளையாட்டு நிகழ்வு

Little Bird முன்பள்ளி பாடசாலையின் இவ்வாண்டிற்கான விளையாட்டு நிகழ்வு முன்பள்ளி பாடசாலையின் அதிபர் திருமதி காளிதாஸன் மதிவதனி தலைமையில் சீலாமுனை ஜங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தியிருந்தார்.

இதன்போது முன்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், முன் பள்ளி பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் பரணிதரன் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்