மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் மே மாத அபிவிருத்தி குழு கூட்டம்.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கௌரவ. செந்தில் தொண்டமான், வர்த்தக இராஜாங்க அமைச்சர் கௌரவ. சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. கோவிந்தன் கருணாகரன் மற்றும் கௌரவ. இரா.சாணக்கியன் போன்ற அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன்.

மேலும் இம்மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டு அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு மாவட்டத்தின் மேச்சல் தரை மற்றும் மகாவலி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றினை எதிர்வரும் 26 ஆந் திகதி நிகழ்த்துவதற்கான தீர்மானமும் எட்டப்பட்டிருந்தது.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்