மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய தரமுயர்த்தும் நிகழ்வு!
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தை தரமுயர்த்தும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.பிறன்சிஸ் தலைமையில் இன்று இடம் பெற்றது.
சிறுவர் நேய பாடசாலையான கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயமானது தரம் ஒன்பது வரை இருந்து வந்த நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் 10ம் மற்றும் 11ம் தர கல்வியை தொடர்வதற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் அப்பாலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் இடைவிலகல் நிலை அதிகரித்துள்ளதாகவும்
பாடசாலை நிர்வாகத்தினர் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு, தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பாடசாலை இன்று (19) திகதி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் 10ம் மற்றும் 11ம் தர வகுப்புக்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மலர் மாலை அணிவித்து, பாண்டு வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் சுராஜ்சிதானந்தா மகராஜ் அவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து விசேட மற்றும் பிரதம அதிதி உரைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து புதிய தரத்திற்கு காலடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு அரசினால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்களை இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இந்நிகழ்வில் மதகுருமார், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருமதி சாமினி ரவிராஜா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி.சீ.சுபாஹரன், கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சண்முகநாதன் சுரேஷ்குமார், கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கல்லடி வேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பரிபால சபையினர், கல்லடி வேலூர் பாலையடி விநாயகர் ஆலய பரிபால சபையினர் , நலன் விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ