தாயாக கரங்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக வாகரை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியினால் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்களுடன் இணைந்து கடந்த 5ம் மற்றும் 6ம் மாதங்களில் முன்னெடுத்த ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு அமைவாக கடந்த கால யுத்தம் மற்றும் அதன் பின் எழுந்த உலகளாவிய கொவிட் தொற்று அதனுடன் இணைந்த பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணிகளால் 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் தமது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்குவதில் சவால்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு அவர்களின் பிள்ளை செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்கும் முகமாக அத் தாய்மார்களுடன் "தாயாக கரம் கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணம் பூராகவும் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டிலும் கட்சியின் மகளீர் அணிச்செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில். கல்குடா கல்வி வலய, வாகரை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரங்கேணி குளம் அ.த.க பாடசாலை, ஓமடியாமடு வேளமுகன் வித்தியாலயம், கொக்குவில் தமிழ் வித்தியாலயம், கிருமிச்சை அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள் போன்றன வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததுடன், அப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை மேம்பாடு, மாணவர்களின் திறன் விருத்தி பாடசாலைகளின் வளப்பற்றாகுறைகள், தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த கிராமத்தின் வீதி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி நிகழ்வில் கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் T. ஆனந்தரூபன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான பூ.பிரசாந்தன், கோட்டக் கல்வி பணிப்பாளர் K. ஜெயவதனன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராஜ், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு கோறளைப்பற்று வடக்கு முன்னால் தவிசாளர் கண்ணப்பன் கணேசன் கட்சியின் வாகரை பிரதேச அமைப்பாளர் பொ. மதிவேந்தன் கல்வி கலை கலாச்சார செயலாளர் ஜேக்குமார், ஆதிவாசிகளின் தலைவர் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ