நவகிரி பாலத்திற்கான களவிஜயம்...

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் காக்காச்சிவெட்டை  மற்றும் யானை கட்டிய வெளியினை இணைக்கின்ற நவகிரி பாலமானது அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகிய தொடர் மழை காரணமாக போக்குவரத்து செய்ய முடியாத அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பிரதேச மக்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அப் பிரதேசத்திற்கான களவிஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அண்மையில் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது குறித்த  நவகிரி பாலத்தினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுச் செயலாளர் பணிப்புரை விடுத்திருந்தார். மேற்படி களவிஜயத்தின் போது போரதீவுப்பற்று இணைப்பாளர்  கருணைராஜன், பிரதேசக்குழுச் செயலாளர் பிரசாத், அரசியல் துறை செயலாளர் தயாபரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ