மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் பாடசாலை காட்மன் மண்டபத்தில் நேற்றையதினம் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், சாதனை மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கான நினைவுச்சின்னங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்திருந்தார். அத்துடன் 2019ம் ஆண்டு தொடக்கம் 2022ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர் பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தியிருந்ததுடன் கல்லூரியின் 209 வது ஆண்டு நிறைவு சிறப்பு மலரும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், பொறியியளாலர் யூ.மயூரன், வைத்தியர் விஜிதரன், கலாநிதி வை.கோபிநாத் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ