28 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட கொக்குவில் இரண்டாம் குறுக்கு மற்றும் நான்காம் குறுக்கு வீதிகள்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட அபிவிருத்தியல் பின் தங்கிய புறநகர் பிரதேசமான கொக்குவில் இரண்டாம் குறுக்கு மற்றும் நான்காம் குறுக்கு ஆகியன கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ. சிவ சந்திரகாந்தன் அவர்களினால் சுமார் 28 மில்லியன் செலவில் கொங்கிரிட் வீதிகளாக புரனமைக்கப்பட்டு நேற்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொக்குவில் கிராமிய குழு தலைவர் பற்குண சிங்கம் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியிலாளர், சிரேஸ்ட பொறியாளர் வாதுளன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ