வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 15 வது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் நந்தகோபன் அவர்களின் 15 வது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் முகமாகவும் விலகல் முறையிலான கரப்பந்தாட்ட சுற்று போட்டியானது அண்மையில் அக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கரப்பந்தாட்ட சுற்று போட்டியானது 23 அணிகளின் பங்கேற்புடன் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றுவந்த நிலையில் அதன் இறுதிநாள் நிகழ்வுகளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், குட்வின் வைத்தியசாலை உரிமையாளர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ