24. 2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சின்னகாலபோட்ட மடு பாலம்

கிராமங்கள் தோறும் உட்கட்டுமானங்களை விருத்தி செய்து உள்ளூர் உற்பத்தியினை அதிகரிக்கும் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பயணத்தின் தொடர்ச்சியாக அவரது சிபாரிசிற்கமைய மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 24. 2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சின்னகாலபோட்ட மடு பாலமானது அவரது கரங்களினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் வாதுலன் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் விமலச்சந்திரன், ஒப்பந்தக்காரர் ரஞ்சிதமூர்த்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் கிராமியகுழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்