35 மில்லியன் செலவில் மண்முனைப்பற்றில் மணல் வீதிகள் கிரவல் வீதிகளாக புனரமைப்பு

"மணல் வீதிகளற்ற கிராமங்கள்" எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் 35 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்

பிரிவில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய மிக முக்கிய மணல் வீதிகள் கிரவல் வீதிகளாக செப்பனிடபட்டுள்ளது.

அந்த வகையில் கிரவல் வீதிகளாக செப்பனிடப்பட்ட வேடுவர் குடியிருப்பு வீட்டுத்திட்ட வீதி மற்றும் புதுக்குடியிருப்பு புளியடி ஐந்தாம் குறுக்கு வீதி என்பன கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் நேற்றைய தினம் வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது .

இந்நிகழ்வுகளில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சனா கௌரி தினேஷ், பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், கட்சியின் கல்வி கலை கலாச்சார பிரிவு செயலாளர் மணிசேகரன், கட்சியின் மண்முனை பற்று பிரதேசக் குழு தலைவர் ஜேக்கப், செயலாளர் கிரீஸ்கந்த முதலி, தொழிற்சங்க செயலாளர் தமிழ்வாணன், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், கிராமிய மட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்