372 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட உள்ளக வீதி திறப்பு விழா.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக 372 மில்லியன் செலவில் காபெட் மற்றும் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட உள்ளக வீதிகள் திறப்பு விழாவானது அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் இணைந்து குறித்த வீதிகளை வைபவரீதியாக திறந்து வைத்திருந்தனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் திரு. கனகசிங்கம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடாதிபதி பேராசிரியர் திரு. சதானந்தன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்க, எமது இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், பேராசிரியர் திருமதி பாரதி கெனடி, பதிவாளர் திரு. பகிரதன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, உட்பட விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்