அம்பாறை கோமாரி மற்றும் பொத்துவில் பிரதேசங்களுக்கு உட்பட்ட கிராமிய குழு உறுப்பினர்களுக்கான விசேட ஒன்றுகூடல்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கொள்கை ரீதியான அரசியல் கட்டமைப்பு விரிவாக்கல் பணிகலானது கிழக்கு மாகாணம் பூராகவும் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்.

அதன் ஒரு அங்கமாக கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 03ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின்  தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்டத்திற்கான கட்சி கட்டமைப்பு விரிவாக்கல் பணிகலானது பிரதேச ரீதியாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோமாரி மற்றும் பொத்துவில் பிரதேசங்களுக்குற்பட்ட கிராமிய குழு உறுப்பினர்களுக்கான விசேட ஒன்று கூடலானது செயற்குழு உறுப்பினர் க.பிரபாகரன் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இதன் போது கட்சியின் அரசியல் ஆலோசகர் ஸ்டாலின் ஞானம், பிரதிச் செயலாளர் (இணைப்பாக்கம் ) வை . சந்திரகுமார் கட்சியின் கனடா கிளை இணைப்பாளர் கண்ணன்,  கட்சியின் முக்கியஸ்தர் சாம்பசிவம் பரணீதரன், சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி இணைப்பார்களில் ஒருவரான  கோபாலன் பிரசாத்,  உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களின் பிரதான பங்குபற்றலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது. அம்பாறை மாவட்டத்திற்கான கட்சி விரிவாக்கல் பணிகளின் பின்னரான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலைந்துரையாடப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் ஆகஸ்ட் 03ம் திகதி நடைபெறவுள்ள அம்பாறை மாவட்டத்திற்கான கட்சியின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக  ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்