காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

மட்டக்களப்பு காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக அணிக்கு ஏழு பேர் கொண்ட லீக் முறையிலான மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது அக் கழகத்தின் தலைவர் பிரேமச்சந்திரன் தலைமையில் காந்தி ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த 9 நாட்களாக மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது.

நாடளாவிய ரீதியில் 64 கழகங்கள் பங்கு பற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது நேற்றைய தினம் வாழைச்சேனை அன்னை வேளாங்கன்னி அணியினருக்கும் நீர் கொழும்பு கப்பிட்டல் அணியிருக்கும் இடையே இடம்பெற்றிருந்தது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டி நிகழ்வின் போது நீர் கொழும்பு கப்பிட்டல் அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றி ஈட்டிய அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களையும் பணப் பரிசில்களையும் பதக்கங்களையும் அணிவித்து கௌரவித்திருந்தார்.

குறித்த நிகழ்வின் போது சிறப்பு அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி விளையாட்டுக் கழக வீரர்கள், பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்