ஆரையம்பதி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

ஆரையம்பதி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ ஆரையம்பதி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது கடந்த ஞாயிற்று கிழமை அப்பாடசாலையின் அதிபர் S. நந்தகோபால் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வின்போது பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வில் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்