தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முதலாவது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்சியின் அரசியல் கொள்கை அறிக்கை - 2012

Body

முகவுரை

எமது நாட்டில். கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலையின் பெயரில் தொடங்கப்பட்ட ஆயுத போராட்டமே உள்நாட்டு போராக மாறி எமது நாட்டை அகல பாதாள நிலைக்கு தள்ளி விட்டு சென்றுள்ளது. இந்த போராட்டமானது அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை போராட்டம் என பிரச்சாரப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மைகள் வேறுவிதமாகவே இருந்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நலன்களை விட குறித்த ஒரு வர்க்கத்தினரின் நலங்களை பாதுகாப்பதாகவே இப்போராட்டம் அமைந்திருந்தது.

இந்த போராட்டத்தை வழிநடத்திய யாழ் - மேட்டுக்குடி அணுகுமுறையானது தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் அக முரன்பாடுகளை களைந்து ஒரு பலமான தமிழ் தேசிய உணர்வை கட்டமைக்கத் தவறியது. அதேவேளை தமிழ் பேசும் மக்களிடையே காணப்பட்ட அக முரன்பாடுகளை மென்மேலும் ஆழப்படுத்தியது. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை எதிரிகளாக கட்டமைத்து இன சுத்திகரிப்பில் ஈடுபட்டது. எல்லைக் கிராமங்களிலும் தென்னிலங்கையிலும் நுழைந்து சிங்கள மக்கள் மீது பாரிய இனப்படுகொலைகளை நிகழ்த்தியது. இவை மட்டுமன்றி நாடு கடந்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளும் தமிழ் சமூகத்துக்குள்ளேயே நடத்தப்பட்ட சகோதர படுகொலைகள் கருத்து சுதந்திர மறுப்பு, மனித உரிமை மீறல்கள் போன்றவை அனைத்தும் இப் போராட்டத்திற்காக இருந்த குறைந்த பட்ச நியாயங்களைக்கூட இல்லாதொழித்தது.
இப் போராடத்தின் பெயரில் எமது சாமானிய மக்கள் அனைவரும் பெரும்விலை கொடுக்க நேர்ந்த போதிலும் அவை அனைத்தும் வீணடிக்கப்பட்டன. குறிப்பாக இப் போராட்டத்திற்காக கிழக்கு மாகாணம் தமது தகுதிக்கும் மேலாக பங்களித்தது. ஆனால் கிழக்கு மாணத்தின் பல்லின யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டது. யாழ் மேலாதிக்க அணுகுமுறைகள் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக 2004ம் ஆண்டு மாபெரும் கிழக்குப் பிளவு நிகழ்ந்தது. இப் பிளவானது மேலோட்டமான பார்வைக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவாக தோற்றமளித்தாலும் இது தமிழீழ தாயகக் கோட்பாட்டில் ஏற்பட்ட பிளவு என்பதே உண்மையாகும்இதன் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் தமிழீழ பிரிவினைவாதத்தையும் வன்முறையையும் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இது இலங்கை தேசத்துடன் மீண்டும் இணையும் சந்தர்ப்பத்தை நமக்கு வழங்கியுள்ளது. அது மட்டுமன்றி தொடர்ச்சியாக இலங்கை மக்கள் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்த படுபயங்கரமான யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் கிழக்கு பிளவே அடிகோலிட்டது.

கடந்த 30 ஆண்டுகால யுத்தமானது வன்முறை கலாச்சாரத்தையும் இன வெறியையும் மட்டுமே இலங்கை எங்கும் விதைத்து சென்றுள்ளது. இலட்சக்கணக்கான பொதுமக்களும் இளைஞர், யுவதிகளும் கொன்று வீசப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இத்தோடாவது இந்த யுத்தம் முற்றுப்பெற்றுள்ளதே என்று ஒவ்வொருவரும் நின்மதி பெருமூச்சு விடுகின்றனர். இது இலங்கையர் அனைவருக்கும் மிகப்பெரும் நின்மதியை கொடுத்திருக்கின்றது.

இன்று யுத்தம் முடிவடைந்திருக்கின்ற நிலையில் எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ள போகின்றோம்? எம்மை எதிர்கொண்டுள்ள சவால்களை நாம் எப்படி வெற்றிகொள்ளப்போகின்றோம்? என்பதே இன்று எழுப்பப்படுகின்ற கேள்விகளாகும். இனவாத அணுகுமுறைகளினூடான அரசியல் கண்ணோட்டங்களே எமது தேசம் எதிர்கொண்ட கடந்த கால அழிவுகளுக்கு காரணமாகும். இதில் சிங்கள தேசிய வாதத்திற்கும், தமிழ் தேசிய வாதத்திற்கும் சம பங்கு உண்டு என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான உணர்வுகளாக வெளிக்கிளம்பியதாக சொல்லிக்கொண்ட தமிழ் தேசிய வாதம் இன வெறியாகவும் பயங்கரவாதமாகவும் மாறி சீரழிந்து போனாலும் அடிப்படையில் இப் போராட்டமானது அதிகாரம் பற்றிய பிரச்சினைகளில் இருந்து எழுந்தது என்கின்ற உண்மைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது.

இதேபோன்று 1970வதுகளின் முற்கூற்றிலும் 1980களின் பிற்கூற்றிலும் தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டம் வெடித்தது. இதுவும்கூட அரசியலில் அதிகாரம் பற்றிய பிரச்சினையில் தேசிய சமத்துவம் இன்மை காணப்படுகின்றமையின் வெளிப்பாடே ஆகும்.

இனவாத அடிப்படைமிலான அதிகாரக் கோரிக்கைகளை நாம் வரவேற்க முடியாதுள்ள போதிலும் தேசிய ரீதியில் காணப்படும் அரசியலில் சமத்துவமின்மை மீது கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. சுருங்க சொன்னால் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருப்பதை தமிழ் மக்கள்,சிங்கள மக்கள் என்கின்ற வேறுபாடுகளுக்கப்பால் எமது தேசத்துக்குடி மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கடந்தகால வட இலங்கை மற்றும் தென்னிலங்கை வரலாறுகள் சொல்லும் பாடமாகும்.

இந்த அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும் என்கின்ற எமது நாட்டு மக்களின் பொதுவான கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அவசியமான காலகட்டம் இதுவாகும். யுத்தத்தாலும், இனவாதத்தாலும் சீரழிந்தும் பிளவுபட்டும் கிடக்கின்ற இலங்கையர்களை ஒன்றுபடுத்தவும், ஒற்றுமையான இலங்கை தேசம் ஒன்றை கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இத்தருணத்தில் சமூக அரசியல் ஜனநாயக மயப்படுத்தல் ஊடாகவே எமது புதிய தேச நிர்மாணத்தில் பரந்துபட்ட மக்களின் பங்கேற்பை உறுதி செய்ய முடியும். மேற்படி நாடு தழுவிய ஜனநாயக மயப்படுத்தலுக்கு மாகாண ரீதியிலான அதிகாரப் பரவலாக்கமே இன்றுள்ள நடைமுறை சாத்தியமான வழிமுறையாகும்.

இலங்கையின் இறைமையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க எமது நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் முன்வரச் செய்வதற்கு முதலில் இலங்கையின் குடிமகன் ஒவ்வொருவரும் தன்னளவில் 'நான் இலங்கையன்' எனும் உணர்வை பெறச் செய்ய வேண்டும். இந்த உணர்வை நோக்கி இன மொழி மத வேறுபாடுகளை கடந்து ஒவ்வொருவரும் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அரசியலில் யாப்பு அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கக்கூடாது. இந்த நாட்டின் பன்மைத்துவம் அரசியல் யாப்பின் ஊடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு ரீதியாக இன, மத, மொழி ரீதியில் தேசிய சமத்துவம் பேணப்பட வழிவகை செய்யப்பட வேண்டும் இத்தகைய மாற்றங்களை நோக்கி எமது நாட்டின் அரசியல் யாப்பு சீரமைக்கப்பட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

இவற்றின் ஊடாகவே இன, மத, மொழி பேதமற்ற சமத்துவ வாழ்வை நோக்கிய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் கட்டியமைக்க முடியும். இந்த அடிப்படையில் தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய எமது ஜனநாயக பிரவேசம் நிகழ்ந்தது. எமது கட்சியின் வரவின் முதல்கட்டமாக கிழக்கிலங்கையில் ஒரு ஜனநாயக மீட்சியை ஏற்படுத்துவதில் நாம் கணிசமான பங்கை வகித்திருக்கின்றோம். எமது தலைமையில் ஜனநாயக அரசியல் மீதான பற்றுறுதியும் எமது கட்சி உறுப்பினர்களின் பாரிய அற்பணிப்பு மனோபாவமுமே இவற்றிற்கு காரணமாகும். அதேபோல வன்முறைக் கலாசாரத்தினை ஒழித்துக் கட்டுவதிலும் நாம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருக்கின்றோம்.

இன்னும் கிழக்கிலங்கையின் பல்லின தன்மையையும் பல்லின கலாசாரத்தையும் நாம் பகிரங்கமாகவும் நேர்மையாகவும் அங்கீகரித்திருப்பதோடு இந்த சமூக யதார்த்தத்தை எமது மாகாணத்தில் வாழும் எல்லா இன மக்களிடத்திலும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளச் செய்வதிலும் வெற்றி கண்டு வருகின்றோம். எமது செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு எமது சமூகத்தின் உழைக்கும் மக்கள், புத்தி ஜீவிகள், மாணவர் சமூதாயம்,பெண்கள் போன்ற அனைத்து தரப்பினரும் எம்மோடு கரம் கோர்த்து செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதன் அடிப்படைமிலேயே நாம் இன, மத, மொழி வேறுபாடுகளை கடந்த ஒரு வெகுஜன இயக்கமாக முழுமையாக பரிணமிக்க முடியும். இந்த புதிய பாதை நோக்கிய எமது பயணத்தின் ஒரு வெளிப்பாடகவே எமது கட்சியானது தனது முதலாவது பேராளர் மாநாட்டையும் தேசிய மாநாட்டையும் ஒருங்கே கூட்டுகின்றது. இந்த மாநாட்டின் ஊடாக எமது அரசியல் கொள்கை அறிக்கையை மக்கள் முன் வைத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தின் சமூக அரசியல் வரலாற்று குறிப்புகள்.

புராதன வரலாறு

கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறானது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும், அதே வேளை சமூக நல்லினக்க பூமி எனும் பாரம்பரியமே கிழக்கு மாகாணத்தின் முதுசமாகும். வரலாற்றிற்கு முற்பட்ட இராமாயண காலத்தில் இருந்து தனது வரலாற்று தடயங்களை இப் பிரதேசம் கொண்டிருக்கின்றது. திருகோணமலையிலும் உகந்தை மலையிலும் இராவணனது ஆட்சிக்கால தடயங்கள் காணப்படுகின்றது. அதே வேளையில் கிழக்கிலங்கையானது பல்வேறுபட்ட மதங்களினதும், இனங்களினதும் இருப்பிடமாகவும் சங்கமமாகவும் இருந்து வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் வரலாறு கூறும் கல்வெட்டு திருக்கோயிலில் மட்டுமே உண்டு. அதே போன்று செப்பேட்டு சுவடி ஒன்று கொக்கட்டிச்சோலையில் மட்டுமே உண்டு. மற்றும் வரலாற்றுக் குறிப்புக்களுடான ஓலைச்சுவடிகள் பல்வேறு கோயில்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

எழுதப்பட்ட வரலாறுகளின் ஊடாக இப்பிரதேசத்தின் வரலாற்றைநோக்குகையில் அது மகாவம்சம் குறிப்பிடும் கி.மு.543ல் இடம்பெற்ற விஜயனின் வருகையுடன் தொடங்குகின்றது. விஜயன் வந்திறங்கிய தம்பன்னையும் விஜயன் தனது 700 தோழர்களை குடியேற்றிய கதிரகலமலைசாரலும் கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றமை முக்கியமானதொன்றாகும். விஜயனின் ஆக்கிரமிப்பின் காரணமாக கிழக்கில் இருந்த ஆதிக்குடிகள் மேல்திசை நோக்கி விந்தனைக்கும், வடக்கு நோக்கி புளியந்தீவு, களுவன்கேணி மற்றும் வெருகலுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் விடயமாகும். கிழக்கின் ஆதிக்குடிகளான இவர்ளே நாம் கொண்ட தொழிலின் அடிப்படையில் வேடர்களாகவும் திமிலர்களாகவும், முக்குவர்களாகவும் பல்வேறுபட்ட குழுமங்களாக பரிணமித்தனர்.

அதே போன்று புத்தரின் விஜயம் பற்றிய மகாவம்ச செய்தி ‘தீகவாவி' பற்றி எடுத்தியம்புகின்றது. 2500 ஆண்டுகால புராதன இராட்சியமான 'தீகவாவி' கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உலகில் காணப்படுகின்ற பூகோள வரைபடங்களுள் மிகத் தொன்மையானது கி.மு. 147ல் தொலமி எனும் கடலோடி வரைந்த படமாகும் இவ் வரைபடத்தில் இலங்கை வரையப்பட்டுள்ளதோடு அதில் கல்முனை துறைமுகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக கி.மு காலத்தில் இருந்தே கிரேக்க பாரசீக வியாபாரிகளின் இறங்குதுறையாக கிழக்கு மாகாணம் திகழ்ந்துள்ளது என்பது புலப்படுகின்றது. என்பதோடு சர்வதேச வியாபாரத்திலும் கிழக்கு மாகாணம் கொண்டிருந்த முக்கியத்துவத்தினையும் இது வெளிப்படுத்துகின்றது.

கி.மு. 145 இலங்கை மீது படையெடுத்த எல்லாளன் திருகோணமலையில் கரையிறங்கியமையும் மேற்படி பின்னணியில் நோக்கற்பாலது. இலங்கையை வென்று 44 ஆண்டுகள் அவன் ஆண்ட பின்னர் அவனை தோற்கடிக்க துட்டகைமுனு தீகவாவியில் இருந்தே படை திரட்டியமையும் அவனது படைகளில் மட்டக்களப்பு தமிழர்களே நிறைந்திருந்தார்கள் எனும் வரலாற்று செய்திகளும் 2000ஆண்டுகளுக்கு முன்பே இனவேறுபாடுகளை களைந்த ஒரு பிரதேச ஐக்கியம் நிறைந்த அரசியல் சமூக  பாரம்பரியத்தினை இந்த கிழக்குமண் கொண்டிருக்கின்றது என்பதை எடுத்தியம்புகின்றது.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தீகவாவி, மாகம, உறுகுண இராட்சியங்களின் ஒரு பகுதியாகவும் அவற்றின் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பனவாகவும் கிழக்கு பிரதேசங்கள் இருந்து வந்துள்ளன. மேற்படி இராட்சியங்களின் அரசர்களாக சிங்களவர்களே இருந்தபோதிலும் அவர்களுக்குட்பட்டு தனித்துவங்களை பேணும் வகையில் ஏழு வகை வன்னிமைகள் என்றழைக்கப்படும் குறுநில மன்னர்களாக தமிழர்களே கிழக்குப் பிரதேசங்களை ஆண்டு வந்திருகின்றார்கள்.

ஏறக்குறைய கி. பி. 800 ஆண்டுகள் வரை மேற்படி உறுகுணை இராட்சியத்தின் அங்கமாகவே கிழக்குப் பிரதேசங்கள் இருந்து வந்துள்ளன. அதன் பின்னர் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட இராசரட்டையின் கீழ் கிழக்கின் பெரும் பகுதிகள் செல்ல நேரிட்டது. 10ம் நூற்றாண்டில் இலங்கை முழுவதும் சோழர்களால் கைப்பற்றப்பட்ட போது கிழக்குப் பிரதேசமும் அன்னியரின் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. சோழர் படையெடுப்பின் போது கரவாகும் (கல்முனை) முஹைதீன் பள்ளியும் அழிக்கப்பட்ட தகவல்கள் இற்றைக்கு சுமார் 1000 ஆண்டு காலமாக கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பு இருந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

மீண்டும் சுமார் 50 வருடகால சோழர் ஆட்சிக்குப் பின்பு பொலனறுவை இராட்சியம் மேலெழுந்தது. அவ்வேளை கிழக்கின் பெரும் பகுதிகள் பொலனறுவையின் அங்கங்களாகின. ஆனபோதிலும் தினசிங்கன் போன்ற தமிழ் மன்னர்கள் மட்டக்களப்பின் சுய இராட்சியங்களை பொலனறுவைக்கு கீழ் இருந்து ஆண்டனர். தினசிங்கனின் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு தமிழர்கள் பலர் சமண சமயத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்திருக்கின்றார்கள்.

இலங்கை மீது அடிக்கடி ஏற்படுத்தப்படும் இந்தியப் படையெடுப்பின் தொடர்ச்சியாக கலிங்க தேசத்தில் இருந்து மகோன் என்பவன் 1225ல் படையெடுத்தான். இவன் முழு இலங்கையையும் 30 ஆண்டுகள் ஆண்டான். இவ் வேளைகளிலும் மகோனின் உப ராஜதானிகளாக கரவாகு,பழுகாமம், மண்முனை, கொட்டியாரம் போன்றவை இருந்தன. திருகோணமலையின் உபராஜாவாக குளக்கோட்டனும் கரவாகுவின் உபராஜாவாக திஸஅலி போடியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாகோனது ஆட்சிக்காலத்தில் அதிகமான சைவ ஆலயங்கள் புனரமைப்பு செய்யப்பட்ன. இதன் காரணமாக ஆலயங்களை நிர்வகிக்க வன்னிமைகளும் அவர்கள் சார்ந்த வழக்காறுகளும் மாகோனால் உருவாக்கப்பட்டன. குடிமுறை, சாதிமுறை போன்றவை இறுக்கமாக்கப்பட்டு ஆலய நிர்வாகங்களுடன் இணைக்கப்பட்டது. அதே வேளை கலிங்க தேசத்தில் இருந்து வேளாளர்களும் அவர்களின் குடிமைசாதியினரும் வரவழைக்கப்பட்டு கோமில்களையண்டி குடியமர்த்தப்பட்டனர். மாகோனது ஆட்சியின் பின்னர் கிழக்கு வன்னிமைகள் மீண்டும் உறுகுணை இராட்சியத்தின் அங்கங்களாகின. ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்காலம் வரை இன்நிலைமை நீடித்தது.

மேற்படி வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் புலப்படுத்தும் விடயங்கள் மீது நாம் கவனம் கொள்ள வேண்டும்.

  1. கடந்த 2500 வருடகாலத்திற்கும் மேலாக கிழக்கிலங்கையானது தனக்கென நீண்டநெடும் வரலாற்றைக் கொண்டுள்ளது.
  2.  சோழ, பாண்டிய, கலிங்க ஆட்சிக் காலங்களைத் தவிர கிழக்கிலங்கையானது பெரும்பாலான காலகட்டங்களில் உறுகுணை இராட்சியத்தின் அங்கமாகவே செயற்பட்டுவந்திருக்கின்றது. அதே வேளை உப ராஜாக்களாகவும் வன்னிமைகளாகவும் கிழக்கின் தனித்துவம் பேணப்பட்டு நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.
  3. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் தமிழையே தாய்மொழியாக கொண்டிருந்த போதிலும் சைவம், சமணம், பௌத்தம்,இஸ்லாம் போன்ற பல்வேறு மதங்களை பின்பற்றி வந்துள்ளனர்.
  4. இன, மத ரீதியாக கிழக்கு மாகாண மக்கள் முரன்பாடுகளையோ       பேதங்களையோ கொண்டிருக்கவில்லை. சிறந்ததொரு சமூக நல்லிணக்க பூமியாக கிழக்கிலங்கை திகழ்ந்து வந்துள்ளது.

காலனித்துவ காலம்

1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையில் காலடிவைத்த போது இலங்கையானது கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் எனும் மூவகை இராட்சியங்களாக காணப்பட்டது. கிழக்கு மாகாணமானது. கண்டி இராட்சியத்தின் அங்கமாக இருந்தது. அதே வேளை கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், பாணமை போன்ற நால்வகை வன்னிமைகளாகவும் இருந்தன. 1597ல் கோட்டை இராட்சியமும் 1619ல் யாழ்ப்பாண இராட்சியமும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. 1605ம் ஆண்டு தென்னிலங்கையில் இருந்து போர்த்துக்கேயரால் துரத்தப்பட்ட (4000) முஸ்லிம்களை கண்டி மன்னன் செனரதன் கிழக்கு கரையோரங்களில் குடியேற்றினான். அதன் பிறகு 1639ல் கண்டி அரசனுடன் செய்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம் போர்த்துக்கேயரை கிழக்கு கரையோர பகுதிகளில் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதித்தது. 1639ம் ஆண்டின் பின்னர் பல போர்த்துக்கேயர்கள் மெது மெதுவாக மட்டக்களப்பு கரையோர பிரதேசங்களில் குறிப்பாக முகத்துவாரம் இறங்குதுறை போன்ற பகுதிகளில் தமது வியாபார மற்றும் வாழிடங்களையும் அமைத்துக் கொண்டனர். இவர்களின் வழித்தோன்றல்களாக உருவானவர்களே 'பறங்கியர்கள்'ஆகும். இதன் பிறகு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றிய போதிலும் கண்டி இராட்சியம் வீழ்த்தப்படவில்லை. ஆனாலும் கிழக்கின் கரையோரங்களை தம் ஆளுகைக்கு உட்படுத்துவதில் ஒல்லாந்தர் வெற்றி கண்டனர். இவர்களே மட்டக்களப்பு கோட்டையை (கச்சேரி) கட்டினர்.

இறுதியாக 1796ல் ஆங்கிலேயர் இலங்கையில் கால் பதித்து 1815ல் கண்டியையும் கைப்பற்றியதனூடாக முழு இலங்கையும் முதன் முதலாக ஐரோப்பியர் வசமாக்கினர்.

அதன் பின்னர் பலமான கண்டி இராட்சியத்தை கூறுபோடும் நோக்கில் ஆங்கிலேயர் இலங்கையை 09 மாகாண அலகுகளாக பிரித்தனர். அதன் அடிப்படையில் 1932ல் கண்டி இராட்சியத்தினை மொழி அடிப்படையில் பிரித்து தமிழர் வாழும் பிரதேசங்களான கிழக்கு கரையோரங்களை தனி ஒரு மாகாணமாக உருவாக்கினர். கிழக்கு வாழ் மக்களின் சமூக பண்பாட்டு மரபு சார் வழக்காறுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து 1876ல் 'முக்குவர் சட்டம்' எனும் தேசவழமை சட்டம் தொகுக்கப்பட்டு அவற்றினை அடிப்படையாகக் கொண்டே கிழக்கு மாகாணம் ஆங்கிலேயரால் பரிபாலிக்கப்பட்டது.

சுதந்திரம்

1948ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்தது. அவ்வேளைகளில் இலங்கையின் நிர்வாகப் பணிகளிலும் அரசியல்தளத்திலும் யாழ்ப்பாணத் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாமிருந்தது. சுதந்திரத்தை தொடர்ந்து இச்செல்வாக்குகள் சரியத் தொடங்கின. யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கத்தினரின் சரிந்து செல்லும் செல்வாக்கை தக்கவைக்க இனவாத அணி திரட்டல் அரசியலை அவர்கள் முன்னெடுத்தனர். இந்த அணிதிரட்டல்கள் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று வடக்கில் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணத்திலும் கால் பதித்தன. மேற்படி கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டதன் ஊடாக மு.இராசமாணிக்கம், இராஜவரோதயம், இராசதுரை  போன்றோர் தமிழின அரசியல் உணர்வுகளை கிழக்கு மாகாண மக்களிடம் ஏற்படுத்துவதில் பாரிய வெற்றி கண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உருவாக்கம்

1976ம் ஆண்டு இலங்கையின் வரலாற்றின் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஆண்டாகும். இலங்கை வாழ் தமிழர்கள் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதே வழி என்றும் அதற்காக தனித் தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும் கூறி ' வட்டுக் கோட்டை' தீர்மானம் எனும் தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றியது. இதனை ஒட்டி பல தீவிரவாத இயக்கங்கள் வடக்கு கிழக்கில் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பும் ஒன்றாகும். இதன் தலைவராக வே.பிரபாகரன் இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தொடர்ச்சியாக போரை நடாத்தி வந்த அதே வேளை கருத்துசுதந்திரமறுப்பு, படுகொலை கலாச்சாரம், குழந்தை போராளிகளை பயன்படுத்தல் என்று பலவழிகளிலும் ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறியது. அதேவேளை கால காலமாக இடம்பெற்று வந்த யாழ் மேலாதிக்க வாதத்தின் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய இராணுவ வெற்றிகளின் பின்னால் கிழக்கு மாகாண போராளிகளின் ஆயிரக்கணக்கான உயிர்களின் அர்ப்பணிப்பு இருந்து வந்தது. ஆனால் கிழக்கு மாகாணம் தொடர்சியாக வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனர்களில் ஒருவரான கல்லடி மைக்கல் பிரபாகரனால் வஞ்சகமாக கொல்லப்பட்டதில் தொடங்கிய மேலாதிக்கம் இறுதி வரை தொடர்ந்தது. மூத்த உறுப்பினர் பொத்துவில் ரஞ்சன் கொல்லப்பட்டார். பல மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ரெலோ எனும் அமைப்பை தடை செய்து அவ் இயக்கப்போராளிகளை கொலை செய்த போது பெரும்பாலான கிழக்குப் போராளிகள் அழிக்கப்பட்டனர். இந்த வேதனையில் மனமுடைந்த அவ் வேளை (1985) மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர்களான கடவுள், காக்கா என்போர் தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையரசுடன் 2002ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை தொடர்ந்து ஏற்படவிருந்த வடக்கு கிழக்கு நிர்வாகத்திற்கான 32 துறை செயலாளர்களை விடுதலை புலிகள்  உருவாக்கினர். அதில் எவருமே கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்காமை கிழக்குப் போராளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேவேளை சமாதான காலத்தில் வடக்குப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பல வித வசதிவாய்ப்புக்கள் கிழக்குப் போராளிகளுக்கு மறுக்கப்பட்டன. அதேவேளை மேலும் ஆயிரக் கணக்கான போராளிகளை கிழக்கிலிருந்து வடக்கு காலவரன்களுக்கு படையாக இடமாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது கிழக்குப் போராளிகளின் பெற்றோரை கடும் அதிருப்பிக்குள்ளாக்கியது.

இயக்கத்தின் தலைமை பீடத்தின் இந்த உத்தரவை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தளபதியான கருணா அம்மான் நிறைவேற்ற முடியாது என அறிவித்தார்.
சுமார் 10 இலட்சம் வட மாகாண தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வசதி வாய்ப்புக்களுடன் இருந்து கொண்டு மீண்டும் ஒரு யுத்தத்தை ஊக்குவித்தனர். அங்கிருந்து பெறும் பண வசூலிப்பு இயக்கத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருந்தது. இந்த நிலையில் புகலிட தமிழர்களின் இருப்புக்காகவே இங்கு போராட்டம் நடாத்தப்படுவதும் அதற்கு பலிகாடாக்களாக கிழக்கு மாகாண இளைஞர்ஃயுவதிகள் பலியிடப்படுவதும் மக்களிடம் அம்பலமாகத் தொடங்கியது. பன்னெடும்காலமாக கிழக்கு மாகாணம் மீது யாழ் மேலாதிக்கம் செலுத்தி வரும் ஒடுக்கு முறைகளில் ஒன்றாகவே இது அமைந்திருந்தது. தொடர்சியாக இடம்பெற்று வரும் மேலாதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு வடக்கு தலைமைகளின் பாதையிலிருந்து விலகி தனியான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் கருத்து கிழக்கு மாகாண மக்களிடத்தில் வலுப்பெற்றது. இதன் வெளிப்பாடக 2004 மார்ச் மாதம் 03ம் திகதி கிழக்குப் பிளவு இடம் பெற்றது. இப் பிளவின் ஊடாக சுமார் 6000ம் ஆயுதம் ஏந்திய கிழக்குப் போராளிகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப முயன்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை அனுமதிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தின் மீது படைகொண்டு ஏவி தாக்குதல் தொடுத்தனர். இதன் காரணமாக ஒரே இரவில் ஏப்ரல் 10ம் திகதி புனித பெரிய வெள்ளி அன்று சுமார் 210 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். அது மட்டுமன்றி பெண் போராளிகள் மானபங்கப்படுத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெருகலில் அரங்கேற்றினர்.

அதைத்தொடர்ந்து கிழக்கு மாகாணம் எங்கும் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. முன்னாள் போராளிகள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என்று கிழக்கு பிளவை ஆதரித்த பலரும் கொன்றொழிக்கப்பட்டனர். இப் பழிவாங்கும் படலத்திலிருந்து தப்பிக்க பல முக்கிய தளபதிகள், போராளிகள் போன்றோர் கிழக்கு மாகாணத்தை மட்டுமல்ல இலங்கையை விட்டே ஓடி ஒழித்தனர். கருணா அம்மான் கூட நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

ஆனாலும் அத்தனை பேராபத்துக்கு மத்தியிலும் மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட போராளிகள் ஒரு குழுவாக நின்று தமிழீழ விடுதலைப்புலிகளை எதிர்கொள்ளத் துணிந்தனர். அவர்களை தலைமையேற்று வழிநடத்தும் வரலாற்றுக் கடமையை 'புவனேசன்,பிள்ளையான்' எனும் போராளிகள் ஏற்றனர். அவர்கள் அப்போது தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என அழைக்கப்பட்டனர்.

காலப்போக்கில் கிழக்கு மாகாணாத்தைவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை விரட்டியடிக்கும் வல்லமை கொண்ட இயக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் வளர்ச்சி பெற்றனர். அப்போது அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என தமது பெயரை மாற்றிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் முதலாவது அரசியல் அலுவலகமாக மீனகம் 10.04.2006ம் திகதி திறக்கப்பட்டது. அதே வேளை கொழும்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்குரிய தலைமை அலுவலகம் 2006 ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 23.01.2008ம் திகதி ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. அதன் உத்தியோக பூர்வ தலைவராக ரகு என்று அழைக்கப்பட்ட குமாரசாமி நந்தகோபன் இருந்தார். அதுவரை காலமும் 2004ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை வெளிநாட்டிலிருந்த கருணா அம்மான் நாடு திரும்பினார். அவரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மானசீக தலைவராக ஏற்று வாகரைக்கு அழைத்துச் சென்று பிள்ளையான் தலைமையிலான மூத்த தளபதிகள் மகிழ்ச்சி கொண்டாடினர்.

அதன் பின்னர், ஒரு சில மாதங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அதிகார மையத்திலிருந்து பிள்ளையான் ஓரங்கப்பட்டார். இதன் காரணமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பெரும்பான்மையான தளபதிகளும் போராளிகளும் பிள்ளையானும் சுமார் 301 பேர் 07 மாத காலம் திருகோணமலையில் ஒதுங்கி கிடக்க நேரிட்டது. இந்த தலைமைத்துவ பிரச்சினையில் ஆயுத மோதல்களும் ஏற்பட்ட துரதிஸ்டம் நிகழ்ந்தது. கட்சியின் உருவாக்க்தின் முக்கிய பங்கு வகித்த சிந்துஜன், பகிரதன், திலீபன் எனும் போராளிகள் கொல்லப்பட நேர்ந்தது. அதன் பின்னர் கருணாஅம்மான் மீண்டும் வெளிநாடு சென்றவேளை லண்டனில் சிறைப்பட நேர்ந்தது. அந்த வேளையில் பிள்ளையான் மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். அவ்வேளை 2008.03.08 திகதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது கன்னித்தேர்தலை எதிர்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட (தமிழ் பிரதேசங்களுக்கு) 08 உள்ளூராட்சி மன்றுகளுக்கும் மாநகர சபைக்குமான தேர்தல் அது. இத்தேர்தலில் அனைத்து இடங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 2008 மே 15ம் திகதி கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது. அவ்வேளையில் 'பிள்ளையான்' தானே தலைமையேற்று அத் தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலிலும் வெற்றி ஈட்டியதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் எனும் வரலாற்றுக் கடமையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை வேட்பாளரான 'பிள்ளையான்' ஏற்றுக் கொண்டார்.

2008ம் ஆண்டு மாகாணசபை தேர்தலின் பின் கருணா அம்மான் நாடு திரும்பியதும் மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர்
பற்றிய பிரச்சனை உருவானது. இதன். உச்சமாக கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரான ரகு கொழும்பில் வைத்து 2008.11.14 அன்று சுடப்பட்டு இறந்தார். தலைவர் நந்தகோபன் அவர்களின் கொலை நடந்த இடத்திற்கு சென்று தடயங்களை உறுதி செய்த முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் அங்கு கூடிமிருந்த பத்திரிகையாளரிடம் கருத்து தெரிவிக்கைமில் இக்கொலையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்படவில்லை என உறுதிபடக் கூறினார். தலைவர் நந்தகோபனின் படுகொலையைத் தொடர்ந்து கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தலைமையிலிருந்து நிராகரிக்கப்பட்டார் அதன் பின்னர் 14.11.2008ம் திகதி கருணா அம்மான்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.

கட்சியின் இலக்கு

எமது கட்சியானது கிழக்கிலங்கை மக்களின் நீண்டகால அரசியல் வெற்றிடத்தினை நிரப்பும் வரலாற்றுக் கடமையை சுமந்து நிற்கின்றது. எமது கட்சி உறுப்பினர்கள் எமது மக்கள் மீதும் மக்களது ஜனநாயக உரிமைகள் மீதும் உண்மையான நேசம் கொண்டவர்களாகும். அதன் காரணமாகவே எமது கட்சிமின் உருவாக்கம் நிகழ்ந்த நாளிலிருந்து பல நூறு உறுப்பினர்கள் தமது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.

அவர்கள்அனைவரது எண்ணங்களினதும் அரசியல் அபிலாசைகளினதும் கருத்தொருமிப்பிலுமிருந்தே எமது கட்சியானது தமது இலக்குகளை வரித்துக் கொண்டுள்ளது.

  •   இலங்கைமின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எமது கட்சி போராடும்.
  •   இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் சமத்துவ  உரிமைகளுக்காக  எமது கட்சி உழைக்கும்.
  •   கிழக்கு மாகாணத்தின் தனித்துவ அரசியல் சுதந்திரத்திற்காகவும் இன  நல்லுறவிற்காகவும் எமது கட்சி பாடுபடும்.
  •   எமது தேசத்தின் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் அதனூடாக உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் எமது கட்சி முன்னிற்கும்.

மேற்படி எமது கட்சியின் செயற்பாடுகளூடாக இன, மத, மொழி, சாதி, பால், வர்க்க, பிரதேச வேறுபாடுகளை களைந்து இலங்கையை ஒரு மதச் சார்பற்ற நாடாகவும் இலங்கையர்களை ஒரு சமத்துவ சமூதாயமாகவும் உருவாக்குவதே எமது இலக்கு ஆகும்.

இதன் அடிப்படைமில் எமது தேசத்து மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வித ஒடுக்கு முறைகளுக்கும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் முற்போக்கு அணிகள் மற்றும் சமூகநல அமைப்புக்கள் புகலிட இலங்கையர் சமூகம் போன்றவற்றோடு இணைந்து செயலாற்ற எமது கட்சி உறுதி பூணுகின்றது.

சர்வதேச நிலைப்பாடு

எமது தேசத்தின் அணிசேரா கொள்கையை நாம் பூரணமாக மதிப்பதோடு இவ்; விடயத்தில் எமது நாட்டின் தேசிய கொள்கையை ஏற்றுக் கொள்கின்றோம். அதே போன்று எமது அண்டைய நாடாகவும் வரலாற்று ரீதியாக எமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதங்களான பௌத்தம், சைவம் போன்ற மதங்களின் மூல ஊற்றாகவும் எமது கலாச்சார பண்பாட்டு அம்சங்களில் நெருங்கிய உறவு கொண்டதாகவும் உள்ள இந்திய தேசத்துடன் நமது நாடு கொண்டிருக்கும் இறுக்கமான உறவினை எமது கட்சி பரிபூரணமாக மதிக்கின்றது. அந்த வகையில் எமது தேசத்தின்‌ நேசநாடுகளின் முதன்மையானதாக இந்தியாவை எமது கட்சியும் ஏற்றுக் கொள்கின்றது.

கடந்த 30 வருட ஆண்டு கால யுத்தத்தின் காரணமாக எமது நாடு தற்போது மிகப் பெரும் கடன் சுமையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏகாதிபத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வர்த்தக மற்றும் சர்வதேச நிதி மூலங்களினது நிபந்தனைகளுக்கு நமது நாடு ஆளாக வேண்டியுள்ளது. இந் நிபந்தனைகள் எமது நாட்டின் சுதந்திர அரசியல், பொருளாதார செயற்பாடுகள் மீதும் எமது தேசத்தின் இறைமை மீதும் அத்துமீறிய குறுக்கீடுகளை செய்ய முனைகின்றன. இத்தலையீடுகளை எமது கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது. இவற்றிற்கெதிராக இலங்கையின் சுயாதீபத்தியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் பணியை எமது கட்சி முன்னெடுக்கும் அதே போன்று எமது தாய் நாட்டின் சுயபொருளாதாரத்தை பாதுகாத்து அதனை வளர்த்தெடுக்கும் முனைப்பில் உள்ள அரசியல் சக்திகளை நாம் பலமாக ஆதரிக்கின்றோம். அதன் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் எடுத்துவரும் உறுதியான சர்வதேச நிலைப்பாடுகளை நாம் வரவேற்கின்றோம்.

தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படையில் எமது நாட்டின் தேசிய வளங்களை சுரண்ட முற்படும் ஏகாதிபத்திய நிதி மூலதனங்களின் நுழைவை தடுப்பதற்கு எமது கட்சி கூடிய அக்கறை கொள்ளும்.

உடனடி வேலைத்திட்டங்கள்

சமூகம்

கிழக்கு மாகாணத்தில் வாழும் நால்வகை இனங்களுக்கிடையில் பலமான ஐக்கியத்தை ஏற்படுத்த உழைத்தல் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் போன்ற இனங்களினதும் கிழக்கு மாகாணத்தில் வாழும் வேடர்கள் என்று அழைக்கப்படும் ஆதிக்குடிகளினதும் மொழி, மத, கலாச்சார பண்பாட்டு கூறுகளையும், தனித்துவங்களையும் கிழக்கு மாகணத்தின் அரிய பொக்கிசங்களாக அங்கீகரித்து பரஸ்பரம் சகல மக்களினதும் பன்மைத்துவம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த உழைத்தல்.

பொருளாதாரம்

எமது மாகாணமானது நாட்டினது தேசிய உற்பத்தியில் அதிமுக்கிய பாத்திரம் வகிக்கும் திறன் கொண்டதாகும். நெடிய கடற்பரப்பும் பாய்ந்தோடும் ஆறுகளும், நீர் நிலைகளும் கிழக்கு மாகாணத்திற்கு வளம் சேர்ப்பன. அகன்று விரிந்த வயல் வெளிகள் இலங்கையின்  நெற்களஞ்சியமாக கிழக்கு மாகாணத்தை வளப்படுத்த வல்லன. ஆனால் கடந்த யுத்த காலத்தில் எமது உற்பத்தி திறன் யாவும் வீணடிக்கப்பட நேர்ந்தது.

எனவே யுத்தம் முடிவடைந்துள்ள சூழலில் எமது மாகாணம் மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் மீள கால்பதிக்க முனைகின்றது. இந்த முனைப்பை ஊக்குவிப்பதும் வளர்த்தெடுப்பதும் தனது முதற்கடமையென எமது கட்சி கருதுகின்றது. மேற்படி துறைகளில் நாட்டின் அதிகூடிய உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்கும் தகுதி கொண்ட மாகாணமாக கிழக்கை கட்டியெழுப்ப உழைத்தல் எமது பணியாகும்.

அரசியல்

கிழக்கு வாழ் அனைத்து மக்களினதும் அபிலாசைகளை நிறைவுசெய்யும் பொருட்டு இன, மொழி அடையாளமற்ற மாற்று அரசியல் பாரம்பரியம் ஒன்றை ஸ்தாபிக்கப்படல். தனித்துவ, அரசியல், மற்றும் பல்லின சமூகங்களின் இருப்பு போன்றவற்றை ஏற்று செயற்படும் அரசியல் சக்திகளுடன் பொது உடன்பாடுகளை மேற்கொள்ளல். மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துவித தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், நிறுவனங்கள், சிறு குழுக்கள் , இலக்கிய அரசியல் எழுத்து செயற்பாட்டாளர்கள் , புத்திஜீவிகள், மாணவர்கள், பெண்கள் போன்ற சகல மட்டத்தினரையும் ஒன்றினைத்து கிழக்கு மாகாணத்தின் அரசியல் பலத்தினை வெளிக்காட்டும் வண்ணம் ஒரு ஆரோக்கியமான அரசியல் உருவாக பாடுபடல்.

புனர்வாழ்வு

கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் எமது மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அடிப்படை கட்டுமானங்களை இழந்து ஏழ்மைமின் விழிம்புக்கு தள்ளப்பட்டோர் விகிதாசாரம் மிக அதிகமானதாகும். எமது எதிர்கால சந்ததியினர் ஆகிய இன்றைய குழந்தைகளின் கனிசமான ஒரு பகுதியினர் தமது பெற்றோரை அல்லது தமது பாதுகாவலர்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். அதேவேளை தமது கணவன்மாரை பறிகொடுத்த பெண்களின் தொகையும் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. இந்த மிகவும் இக்கட்டானதொரு கால கட்டத்தில் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகள் தொடர்பில் எமது கட்சியானது மிக கூடிய அக்கறை கொள்ளும். அதேவேளை ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், போன்றேரின் கல்வி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி கொடுக்கும் பணியை அவசியமானதாகவும் அவசரமானதொன்றாகவும் நாம் கருதுகின்றோம். இவற்றுக்காக அக்கறையுடன் உழைக்க எமது கட்சியின் சகல மட்டத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கலை, கலாசாரம்

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. எமது மாகாணமானது மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட கலாசார பொக்கிசங்களின் இருப்பிடமாகும். திராவிட பாரம்பரிய கலைவடிவங்கள் இன்றும் காப்பாற்றப்பட்டுவரும் பூமியாக கிழக்கு மாகாணம் திகழுகின்றது. ஆனால் கடந்த கால யுத்த அனர்த்தம் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாக எமது கலாசார தளங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கலைவடிவங்கள் மீதான கடந்தகால கருத்து சுதந்திர மறுப்பின் காரணமாக எமது கலைஇலக்கியவாதிகளின் சுதந்திரமான செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எமது கலை இலக்கிய பண்பாட்டு வடிவங்களை அவற்றின் அழிவிலிருந்து காப்பாற்றவும் அவற்றின் செயற்பாடுகளை புத்தாக்கம் செய்யவும் அவற்றை சுதந்திரமாக இயங்கச்செய்யவும் எமது கட்சி பல வேலை திட்டங்களை முன்னெடுக்கும். உழைக்கும் மக்கள் பண்பாட்டில் அமைந்த கலை இலக்கிய வடிவங்களிற்கும் நவீன கலை இலக்கிய முயற்சிகளுக்கும் முன்னுரிமையும் வரவேற்பும் அளிக்க எமது கட்சி உறுதிபூணுகின்றது.

பெண்களின் மேம்பாடு

எமது நாடு எதிர்கொண்ட மூன்று தசாப்த காலத்தின் யுத்தத்தின்காரணமாக மிகவும் பாதிப்பை எதிர்கொண்ட பிரிவினராக பெண்கள் காணப்படுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்துள்ள இன்றைய நிலையில் பொருளாதார மேம்பாடு குறித்த பலவித அபிவிருத்தி திட்டங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கென செயற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகளின் தாக்கம் எமது பெண்களின் மேம்பாட்டுக்கு பெரும் தடையாகவே இருந்து வருகின்றது. கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம் எனும் பெயர்களின் பெண்கள் மீதான சமூக ஒடுக்கு முறை தொடருகின்றது. இவற்றின் வெளிப்பாடுகளே எம்மத்தியில் இடம்பெற்றுவருகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஆகும். இந்த ஒடுக்குமுறை வடிவங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை சமூக மட்டத்தில் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக பெண்களை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வுகளை கட்சியினுள்ளும் உருவாக்குவதற்கு ஏற்பாக கட்சியின் சகல மட்ட உறுப்பினர்களுக்கும் அரசியல் அறிவூட்டப்படும். வேலைவாய்ப்புகள், பதவியுயர்வுகள், மற்றும் அரசியல் அதிகார மையங்கள,; நிதி ஒதுக்கீடுகள் போன்ற முக்கித்துவம் வாய்ந்த விடயங்கள் அனைத்திலும் சம வாய்ப்புக்களை பெண்களுக்கு பெற்றுக்கொடுக்க எமது கட்சி போராடும் அதேபோன்று நிதி, நிர்வாகம், சட்டத்துறைகள் அனைத்திலும் பெண்ணிலைவாத நோக்கிலான கருத்துக்களை எமது கட்சி வலியுறுத்தும்.

சாதிய ஒடுக்குமுறை

சாதி ரீதியான வேறுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் தமிழ் சமூகம் விட்டொழிக்க வேண்டிய பிற்போக்கு தனங்களில் முதன்மையானதாக எமது கட்சி அடையாளம் காணுகின்றது.  சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இனவாகத்திற்கும் நிறவாதத்திற்கும் சமனான ஒரு ஒடுக்குமுறையே ஆகும். இச்சாதி வேறுபாடுகளை  களைய எமது கட்சியானது கடுமையாக பாடுபடும். சாதி ரீதிமிலான ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படும் தலித் (பஞ்சமர்) விடுதலைக் கான சகலவிதமான போராட்டங்களுக்கும் எமது கட்சி பூரண ஆதரவு வழங்கும்.

விவசாயிகள்/தொழிலாளர்கள்

எமது நாட்டின் சனத்தொகையில் தொழிலாளர் வர்க்கமே பெரும் பங்கு வகிக்கின்றது. அதே போன்று கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையிலும் உற்பத்திமிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களுமே ஆகும். இவர்கள் நெல் மற்றும் உணவு உற்பத்தி, மீன்பிடி சார்ந்த சிறு விவசாயிகளாகவும் கூலி உழைப்பாளர்களாகவும் காணப்படுகின்றனர். அதே போன்று நகர்ப்புற தொழிலாளர்களும் இப்போது பெருகிவருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழான நிலைமிலேயே காணப்படுகின்றது. இத் தொழிலாளர் வர்க்கத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு தடையாகவுள்ள காரணிகளை இனம் கண்டு அவற்றை அகற்ற பாடுபடல் எமது கட்சிமின் முதன்மை வேலைத்திட்டங்களில் ஒன்றாகும்.

அதேவேளை எமது மாகாணத்தில் விவசாய தொழிலாளர் வர்க்கமானது கூட்டுறவு மற்றும் தொழிற்சங்க அடிப்படையில் அணிதிரளாமை பெரும் குறைபாடாகும். இத்தகைய அணிதிரட்டல்கள் ஊடாகவே தொழிலாளர் வர்க்கம் உரிமைகளுக்காக போராடவும் உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் அவற்றை பாதுகாக்கவும் முடியும். எனவே தொழிலாளர் வர்க்கத்தின் நலன்கருதி மேற்படி அடிப்படை வேலைத்திட்டங்களையிட்டு எமது கட்சி மிகுந்த கரிசனை கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிழக்கிலங்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு கூட்டுறவு அமைப்புக்களை ஸ்தாபிக்க ஏற்பாடு செய்வதும் தொழிலாளர்வர்க்கத்தை தொழிற்சங்க அடிப்படையில் அணிதிரட்டி பலம்பெற செய்வதையும் எமது கட்சியானது உடனடி பணியாக கொள்கின்றது.

உட்கட்சி ஜனநாயகத்திற்கான கட்டமைப்புக்களும் அவற்றின் இயங்கு முறையும்

உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க எமது கட்சியின் உத்தியோகபூர்வ யாப்பில் இடம் பெற்றுள்ள கட்டமைப்புகளின் அடிப்படைமில் ஒற்றுமை, உரிமை, தனித்துவம் எனும் கோட்பாடுகளுக்கு அமைய எமது கட்சி செயற்படும்.

Views
Video

மதிப்பிற்குரிய தலைவர் சிவநேசதுரை சந்திகாந்தன் அவர்களின் உரை

Date
Video

செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின் உரை

Date