மீன் உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக காசோலைகள்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக கடற்தொழில் நீரியல் வள அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய மட்டத்திலான மீன் உணவுத் தேவையை நிறைவு செய்யும் முகமாக தடாக மீன் வளர்ப்பு மற்றும் புகை கருவாடு உற்பத்தி ஏனைய மீன் உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக காசோலைகள் வழங்கும் நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுகளின்போது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரின் கல்வி இணைப்பாளர் ஆசிரியர் K. K. அரஸ் மற்றும் கடற்தொழில் நீர் வழங்கல் திணைக்களத்தின் நன்னீர் மீன்பிடித் துறை மாவட்ட உத்தியோகஸ்தர் அகமட் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்