30 மில்லியன் ரூபா செலவில் 1 கிலோமீட்டர் நீளமான மகிழடித்தீவு தெற்கு 4ம் குறுக்கு வீதி.

30 மில்லியன் ரூபா செலவில் 1 கிலோமீட்டர் நீளமான மகிழடித்தீவு தெற்கு 4ம் குறுக்கு வீதி.

கிராமிய உட்கட்டுமானங்களை விருத்தி செய்யும் பயணத்தின் தொடர்சியாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மகிழடித்தீவு தெற்கு, கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 4ம் குறுக்கு வீதிக்கான ஆரம்ப வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் நேற்றையதினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

மகிழடித்தீவு தெற்கு மக்களின் நீண்டகால தேவையாக இருந்த 1 கிலோமீட்டர் நீளமான இவ் வீதியானது 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு மிக விரைவில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

எமது கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ பூ. பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், ம. தெ.மே. பிரதேச சபை உறுப்பினரும், பிரதேச கிளையின் செயலாளருமான ம. குகநாதன், பிரதேச கிளையின் தலைவர் ரமேஷ், கட்சியின் மகிழடித்தீவு தெற்கு கிராமிய தலைவர் க. தயாகரன். மகிழடித்தீவு கிராமிய தலைவர் காமராஜ். பிரதேச கிளையின் நிர்வாகிகள், கிராமிய நிர்வாகிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் உறுப்பினர்களிடமிர

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைம

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களுடனான விசேட கலந்துரையாட