இருநூறுவில் கிராமியப்பாலம் இராஜாங்க அமைச்சரினால் திறந்துவைப்பு
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள இருநூறுவில் கிராமிய பாலமானது நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
மிக மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்பட்ட மண்முனை மேற்க்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை செல்லும் பிரதான பாதையில் அமைந்திருந்த இருநூறுவில் பாலத்தினை புனரமைக்க வேண்டுமென அப்பகுதியினை சேர்ந்த பிரதேச வாசிகள் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய மற்றும் பிரதேசமட்ட குழுக்களினூடாக விடுத்த வேண்டுகோளுக்கமைய சுமார் 15.3 மில்லியன் ரூபா செலவில் அப்பாலத்தினை நிர்மாணித்து நேற்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்திருந்தோம்.
கடந்த காலங்களில் இருநூறுவில் கிராமியப் பாலமானது மிக மோசமாக நிலையில் சிதைவடைந்து காணப்பட்டமையினால் உற்பத்தியாளர்களும், விவசாயிகழும் அறுவடைக்காலங்களில் தமது உற்பத்திகளை எடுத்துச்சென்று உரிய முறையில் சந்தைப்படுத்த முடியாத துர்பாக்கிய நிலையும், பாடசாலை மாணவர்கள் உட்பட பிற தேவைகள் கருதி குறித்த பாலத்தினை பயன்படுத்துவோரும் பாரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய சூழலும் தோற்றம் பெற்றிருந்தது. தற்போது அந் நிலைமை முழுமையாக மாறியுள்ளமை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஓர் விடயமாகவே நான் பார்க்கின்றேன்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பரதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் நந்தகோபன் உட்பட இப்பால வேலைகளை திறம்பட முடித்துத் தந்த சது கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சுரேஷ்குமார், சது கன்ஸ்ட்ரக்ஷன் மேற்பார்வையாளரான கோடீஸ்வரன், இருநூறுவில் பிரதேச விவசாய அமைப்பின் தலைவர் சித்தானந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வவுணதீவு பிரதேச அமைப்பாளர் நித்தீஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த