செம்பித்துறை வடிசல் வாய்க்கால் மற்றும் பம்மாந்துறை பிரதான விவசாய பாதை போன்றன செப்பனிடும் நடவடிக்கைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விசேட களவிஜயம்
சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்துறை வடிசல் வாய்க்கால் மற்றும் பம்மாந்துறை பிரதான விவசாய பாதை போன்றன செப்பனிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்.
பொன் விளையும் பூமியாக திகழும் பாரம்பரிய விவசாயக் கிராமங்களான சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்துறை வடிசல் வாய்க்காலானது மிகநீண்ட காலமாக துப்புரவு செய்யப்படாமை தொடர்பிலும், பம்மாந்துறை பிரதான விவசாய பாதையானது மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாத காரணத்தாலும் போக்குவரத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக ஏறக்குறைய 250 ஏக்கருக்கும் அதிகமான விவசாயக்காணிகள் சீராக செய்கைபண்ணுப்படாது காணப்பட்டமை குறித்தும் விவசாய பிரதிநிதிகள் எறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கௌரவ. நவரெத்தினம் திருநாவுக்கரசு அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த விடயங்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ. சிவ சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த விடயங்ள் தொடர்பில் அதிகூடிய கவனங்களைச் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த வடிசல் வாய்க்காலிற்க்கான துப்புரவுப் பணிகளும் வீதி செப்பனிடும் பணிகளும் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்
குறித்த வேலைகள் தொடர்பிலான விசேட களவிஜயத்தினை இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்றையதினம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்விஜயத்தின் போது விவசாயப்பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் இராஜாங்க அமைச்சருக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
குறித்த களவிஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. நாகரெட்ணம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உறுகாமப் பிரிவுப்பொறியியலாளர் திரு. விஷ்ணுரூபன் உட்பட துறைசார் அதிகாரிகள் விவசாயிகளென பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த