கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான நேரடி கள விஜயம்..
கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான நேரடி கள விஜயமும், மக்களுடனான சந்திப்பும். கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் "மக்களுடன் நாம்" செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பின் போது கதிரவெளி, புச்சாக்கேணி, பால்சேனை, அம்மன்தனாவெளி, காயாங்கேணி போன்ற பிரதேசங்களுக்கு நேரடி கள விஜயத்தினை மேற்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிராமத்தின் குறை நிறைகள் தொடர்பாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் நேரடியாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அதற்கான தீர்வினை முடிந்தவரை மிக விரைவாக பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். மேலும் 25 பேர் கொண்ட மகளிர் அணியையும், காயாங்கேணி பிரதேசத்தில் கிராமிய குழுவையும் புதிதாக தெரிவுசெய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ நாகலிங்கம் திரவியம் அவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள், கோறளைப் பற்று தவிசாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த