வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரியளவிலான மீன் வளர்ப்பு திட்டம்
கோறளைப்பற்று வடக்கு வாகரை பச்சைவெட்டை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரியளவிலான மீன் வளர்ப்பு திட்டம்.
மாவட்டத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி உள்ளூர் உற்பத்தியினை அதிகரித்தல் அதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த என்கின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் உயரிய சிந்தனைக்கு அமைவாக கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பச்சைவெட்டைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பாரியளவிலான திலாப்பியா மீன் வளர்ப்பு திட்டம்.
குறித்த திட்டத்தினுள் 80 பயனாளிகள் உள்வாங்கப்பட்டு ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 1/2 ஏக்கர் அளவிலான திலாப்பியா மீன்வளர்ப்பிற்க்கான குளங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இத் திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ள பயனாளிகளுக்கான நேர்முக தேர்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டகத்திற்கான ஆரம்ப வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் 80 லட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வேலைகளின் முன்னேற்றம் தொடர்பிலான நேரடி களவிஜயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. சந்திரகாந்தன் அவர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த களவிஜயத்தின் போது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் திரு. அருணன் , கோறளைப்பற்று வடக்கு வாகரை உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதாகரன், மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கம் உத்தியோகஸ்தர் திரு. நெல்சன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதி தலைவர் கௌரவ. நாகலிங்கம் திரவியம், கோறளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ. கண்ணப்பன் கணேசன் உட்பட ஏனைய துறைசார் அதிகாரிகள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த