பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு.
25/ 01/ 2022 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு. அரசாங்கத்தின் ''நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு'' கொள்கைப் பிரகடனத்திற்கமைய நேற்றையதினம் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சேவைக்கு இணைப்புச் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்திருந்தனர். குறித்த நிகழ்வுகளின் போது மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கருணாகரன் உட்பட மேலதிக அரசாங்க அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கலான துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த