340 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் 12 km நீளமான வீதி.

340 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் காந்திநகர் தொடக்கம் பன்சேனை மற்றும் தாந்தாமலை வரையிலான 12 km நீளமான வீதி.

கிராமிய உட்கட்டுமானங்களை விருத்தி செய்யும் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பயணத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் 340 மில்லியன் ரூபா செலவிலான மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காந்தி நகர் கிராமத்திலிருந்து பன்சேனை மற்றும் தாந்தாமலை வரை செல்லும் 12km நீளமான வீதிக்கான ஆரம்ப வேலைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தொடக்கி வைத்திருந்தார்.

அப்பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வந்த குறித்த வீதீயினூடாக அப்பிரதேச மக்கள் தங்களது உற்பத்திகளை தங்குதடையின்றி சந்தைப்படுத்த முடிவதுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை திறன்பட முன்னெடுக்க முடியும்.

குறித்த நிகழ்வுகளின் போது எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சுதாகர் உட்பட துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்