மின்குமிழ் வசதியுடன் கூடிய புதிய கரப்பந்தாட்ட மைதானம்.
மின்குமிழ் வசதியுடன் கூடிய புதிய கரப்பந்தாட்ட மைதானம்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு இளைஞர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் அண்மையில் புதிதாக அமைத்து அதற்கு நந்தகோபன் விளையாட்டரங்கு என பெயர் சூட்டியுள்ளார்.
புதுக்குடியிருப்பிலுள்ள கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தமது பயிற்சி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கும் வண்ணமாகவும் எதிர்காலத்தில் இம் மைதானத்தை பயன்படுத்தி மாவட்ட மற்றும் மாகாண, தேசிய ரீதியில் தமது சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்புதிய நந்தகோபன் கரப்பந்தாட்ட மைதானத்தினை நிறுவியுள்ளார்.
அதனுடன் இணைந்ததாக இரவு வேளைகளிலும் வீரர்கள் தமது பயிற்சி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வண்ணமாக மைதானத்தைச் சுற்றி மின்குமிழ் வசதிகளையும் ஒழுங்கு செய்து வழங்கியுள்ளார். குறித்த நிகழ்வுகளின் போது கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் உட்பட துறைசார் அதிகாரிகள், கழக உறுப்பினர்கள் கரப்பந்தாட்ட வீரர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த