தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு
சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுவருகின்றன. அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் கட்டங்கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனால் வழங்கி வைக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் மட்/ மகாஜனக்கல்லூரி, மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி,மட்/ இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கும் அதே போன்று இன்றைய தினம் மட்/ முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயம், மட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயம், மட்/ கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதங்களை வழங்கி வைத்திருந்தார்.
இதன்போது அந்தந்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகம் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதே போன்று தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் இவ் உத்தியோகபூர்வ கடிதங்கள் மிக விரைவில் வழங்கி வைக்கப்படும் என கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த