தேசிய பாடசாலைகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உருவாக்கும் திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக தேசிய பாடசாலைகளாக அறிமுகம் செய்யும் நிகழ்வானது எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரியில் எமது தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வானது கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 20 - 30 பேர் வரையிலான அதிகாரிகளை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு சம்பந்தமான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்றைய தினம் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களான தர்மசேன மற்றும் வீரசிங்கே உட்பட மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம் நிஷாம் மற்றும் வலையக் கல்விப் பணிப்பாளர்கள் போன்றோருடன் Zoom வலையதளத்தின் ஊடாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த