கௌரவ தலைவர் அவர்களின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான விஜயத்தின் போது....

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் விஜயம் செய்து அங்கு இருக்கின்ற நிலைமைகளை அவதானித்துடன் அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

அங்கு அவர் குறிப்பிடுகையில் "தற்போது எமது நாட்டில்நிலவக்கூடிய கொவிட்  தொற்றுதல் நிலைமை காரணமாகவும் அரசாங்கத்தினுடைய பொருளாதார நிலைகாரணமாகவும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க முடியாத பொழுதும் அங்குகாணப்படுகின்ற பிரச்சினைகளையும் தேவைகளையும் இனம் கண்டு அவற்றை குறுகிய காலத்தில் தீர்த்தகூடியவை நீண்ட காலத்திற்கு தீர்க்கக் கூடியவை என்று தரம் பிரிப்பதன் ஊடாக கட்டங்கட்டமாக அவர்களது பிரச்சனைகளை முடிந்த அளவு தீர்த்து கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும். அதுமட்டுமில்லாமல் அங்கு சென்றிருந்த தனக்கு மக்கள் அளித்திருந்த அன்பையும் ஆதரவையும் பார்க்கின்ற பொழுது  மிகவும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளித்ததாகவும் தான் இன்னும் அந்த மக்களுக்காக அதிக மணி நேரம் வேலை செய்யவேண்டும் மற்றும் அவர்களது பிரச்சினைகளை முடிந்த அளவு தீர்க்க வேண்டும் என்கின்ற உள் உணர்வினையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்''.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்