28 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட கொக்குவில் இரண்டாம் குறுக்கு மற்றும் நான்காம் குறுக்கு வீதிகள்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட அபிவிருத்தியல் பின் தங்கிய புறநகர் பிரதேசமான கொக்குவில் இரண்டாம் குறுக்கு மற்றும் நான்காம் குறுக்கு ஆகியன கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ. சிவ சந்திரகாந்தன் அவர்களினால் சுமார் 28 மில்லியன் செலவில் கொங்கிரிட் வீதிகளாக புரனமைக்கப்பட்டு நேற்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொக்குவில் கிராமிய குழு தலைவர் பற்குண சிங்கம் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியிலாளர், சிரேஸ்ட பொறியாளர் வாதுளன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்