மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்.

மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான விசேட கூட்டமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினையும் சுயதொழிலினையைம் விருத்தி செய்யும் நோக்குடன் அப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சன கெளரி, RDA எந்திரி குமரன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் S.பிரபாகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் S.குகநாதன், பிரதேச குழு தலைவர் காமராஜன் , பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்