SKO கராத்தே நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கராத்தே சுற்றுப் போட்டி.
தேசிய மட்ட கராத்தே போட்டியில் பங்குபற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக SKO கராத்தே நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவரும் பிரதம போதன ஆசிரியருமான K.T. பிரகாஷ் அவர்களின் தலைமையிலும் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் குறித்த இக் கராத்தே போட்டி நிகவானது இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தார், அத்துடன் சர்வதேச ரீதியில் மலேசியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை தன்வசப்படுத்தி மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமைசேர்த்த கராத்தே வீரன் R.ரதனை இராஜாங்க அமைச்சர் பொன்னாடை போர்த்தி கெளரவித்து நினைவுச்சின்னத்தையும் வழங்கிவைத்திருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாண நிர்வாக செயலாளர் கோபாலப்பிள்ளை, மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி பத்மராஜா, வலயக் கல்வி பணிப்பாளர் மட்டக்களப்பு சுஜாதா குலேந்திரகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் , வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர் உட்பட வீர வீராங்கனைகள் பொதுமக்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்