காரைதீவு RKM மகளீர் வித்தியாலய கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு.

அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது அண்மையில் இடம்பெற்றிருந்தது.
எதிர்கால தலைவர்களான அம்மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆளுமை படுத்தும் முகமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன் இடம்பெற்ற நிகழ்வுகளையும் கண்டுகளித்து நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்திருந்தார்.
இதன்போது காரைதீவு பிரதேச செயலாளர் S.ஜெகராஜன், காரைதீவு DEO டேவிட், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரஸ்ரீ , கண்ணகி வித்தியாலய அதிபர் S.திருகுமார் உட்பட மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டன.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்