பழைய மாணவர்களை ஒருங்கிணைப்புச் செய்யும் முகமாக பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில்
பழைய மாணவர்களை ஒருங்கிணைப்புச் செய்யும் முகமாக பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் அப்பாடசாலையின் பழைய மாணவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன் போது மென்பந்து மற்றும் எல்லை விளையாட்டு போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அநேகருக்கு தெரிந்திருக்கும் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் தரம் 01 தொடக்கம் 08 வரை பேத்தாழை விபுலானந்தா கல்லூரியிலும் அதன் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலும் இணைந்து தனது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார், அக்காலப்பகுதியிலேயே நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப சூழ்நிலை காரணமாக தனது 16 வயதில் குழந்தைப் போராளியாக விடுதலை புலிகள் அமைப்பிலே இணைந்ததன் மூலம் அவரது பாடசாலை பயணமும் முடிவிற்கு வந்தது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்